பக்கத்துவீட்டு அண்ணனுடன், சென்ற சிறுவன்.! கட்டிலுக்கு அடியில் விபரீதம்.!
Gujarat youngster murder
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் திவாரி என்பவருக்கு பதினோரு வயதில் ஆகாஷ் என்ற மகன் இருக்கின்றான். இவர் தனது பக்கத்து வீட்டு இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், இளைஞரிடம் செல்போனை கேம் விளையாட கேட்டு ஆகாஷ் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளான். பலமுறை செல்போனை தர மறுத்து இளைஞர் சிறுவனை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கேம் விளையாட ஆகாஷ் மீண்டும் செல்போனை கேட்டு எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கின்றார்.
சிறுவனை காணாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டு இளைஞர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் பக்கத்து வீட்டில் பரிசோதித்தபோது கட்டிலுக்கு அடியில் ஆகாஷின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.