தீபாவளிக்கு பிறகு பள்ளி,கல்லூரி கட்டாயம் திறக்கப்படும்.?! அமைச்சர் உறுதி..?!
GUJARAT SCHOOL AND COLLAGE OPEN AFTER DIWALI
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு மிக தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பாதிப்பு குறைந்த மாநிலங்களில் அந்தந்த மாநில நிலவரங்கள் குறித்து பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஆந்திரா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறந்து இருக்கின்றது. இதனை தொடர்ந்து குஜராத்திலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குஜராத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
English Summary
GUJARAT SCHOOL AND COLLAGE OPEN AFTER DIWALI