ஆன்லைன் ஆண் நண்பரை நம்பி சென்ற ஆணிற்கு அரங்கேறிய சோகம்... நால்வரால் ஓரின கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தை சார்ந்த மாடலிங் செய்யும் 19 வயது வாலிபர், சமூக வலைத்தளம் வாயிலாக 26 வயது சுக்லா என்ற நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். 19 வயது வாலிபர் மாடலிங் துறையில் முன்னேற விரும்பிய நிலையில், இது குறித்து சுக்லாவிடமும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சுக்லா வாலிபரை தானே நகருக்கு வரச்சொல்லவே, கடந்த வாரம் சுக்லாவை தேடி தானேவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், சுக்லாவும் அவரது நண்பர்களும் சேர்த்து வாலிபரை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனை வீடியோ காட்சியாக பதிவு செய்து, இதனை வெளியே கூறினால் சமூக வலைதளத்தில் விடியோவை பதிவு செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன வாலிபர் தனது உறவினரின் இல்லத்திற்கு சென்ற நிலையில், தனது நண்பர்களிடம் விஷயத்தை கூறி கதறியழுத்துள்ளார். 

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த நண்பர்கள், வாலிபரை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து சுக்லா, ரவி ஜெய்ஸ்வால், அரவிந்த் ப்ரஜாபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவரையும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Modelling Youngster Homo Sex abused by Online Friend in Mumbai Thane


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->