ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்.! உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோதம்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோதமான ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே பரவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையின் தனித்துவிடப்பட்ட ஒரு பகுதியை நிர்வாகம் சுற்றுலாக கைதிகளுக்காக மாற்றி அமைத்துள்ளது.

இந்த சுற்றுலா கைதிகளுக்கு சிறை சீருடைகள் மற்றும் சிறை சமையலறையில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டு ஒருநாள் இரவு முழுவதும் தங்க வைக்கப்படுகிறது. இதற்காக ரூபாய் 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, மக்களிடையே தோஷம் போக்கும் ஒரு மூட நம்பிக்கையாக பரவி வருகிறது.

சிறைச்சாலையில் ஒரு நாள் முழுவதும் இருந்து வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் கழிந்து விடும் என்று அப்பகுதியில் உள்ளவர்களால் நம்பப்படுகிறது. மேலும் நேரம் சரியில்லை என்று சொல்லப்படுபவர்கள் கூட ஒரு நாள் சிறைச்சாலையில் தங்கி இருந்தால் சரியாகிவிடும் என்ற மூட நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Go to jail by just paying 500 in Uttarakhand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->