ஒரு நாளுக்கு 40000 ரூ... போலீசிடமே பேரம் பேசிய ப்ரோக்கர்... தானாக வந்து வலையில் சிக்கிய மாணவிகள்..!
girls rescued prostitution
40,000 ரூபாய்க்கு ஒரு நாள் முழுவதும் பெண்ணை சப்ளை செய்வதாக, ஒரு வாடிக்கையாளராக நடித்து பேசிய காவல்துறை அதிகாரியிடம் பேரம் பேசிய ப்ரோக்கரை பிடிக்க அந்தேரி கிழக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தியதன் மூலம், பாலிவுட் தயாரிப்பு மேலாளரும், இயக்குனர் ஒருவரும் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கூறி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்கள்.
மேலும், அந்த விபச்சார கும்பலிடம் இருந்து மூன்று பெண்களை போலீசார் மீட்டு இருக்கிறார்கள். 3 பெண்களில் இருவர் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த மாணவிகள். சில சினிமா புள்ளிகள் திரையுலகில் நடிக்க வாய்ப்பளிப்பதாக உறுதியளித்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பதை அறிந்த மும்பை போலிஸ், நவேத் அக்தர் (26) மற்றும் நவேத் சயாத் (22) ஆகியோரை ஒரு வாடிக்கையாளர் போல தொடர்பு கொண்டு, பேசியபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.40,000 விலையில் பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்புவதாக உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்தேரி கிழக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதை தொடர்ந்து, விபச்சாரத்துக்கு வந்த பெண்கள் துர்க்மெனிஸ்தான் நாட்டை சேர்ந்த புனேவில் இருக்கும் பல்கலைக்கழக மாணவிகள், அவர்களை வெளிநாட்டுல் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மும்பைக்கு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
girls rescued prostitution