முகப்புத்தகத்தால், முக்காடு போட வைத்த நண்பர்கள்.! பேஸ்புக் தோழிக்கு பேரதிர்ச்சி.!
girl raped using facebook
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்மணி இன்டெர்னட் அதிகளவு உபயோகம் செய்து வந்துள்ளார். இவருக்கு இன்டெர்னட் மூலமாக சமீர் மற்றும் அமித் என்ற நபருடன் நட்பு கிடைத்துள்ளது.
இந்த நண்பர்களை சந்திக்க கடந்த வெள்ளிக்கிழமை குவாஹாத்தியில் இருந்து லக்னோ வழியாக கான்பூருக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில், இவர்கள் இருவரும் பெண்ணை விடுதிக்கு அழைத்த சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதன் பின்னர் மிரட்டி ஞாயிற்றுக்கிழமை குவால்டோலி பகுதியில் இருக்கும் பங்களாவிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களின் பிடியில் இருந்து தப்பிய பெண் உள்ளூர் மக்களிடன் உதவியுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரிகள் வந்து பெண்ணை மீட்ட பின்னர், இந்த குற்றத்தில் ஈடுபட்ட மனோஜ், சமீர் அகர்வால் மற்றும் சாக்ஷாம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமித் அகர்வால் மட்டும் தலைமறைவாக இருப்பதால் தேடி வருகின்றனர். மேலும், அமித் அகர்வால் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
girl raped using facebook