தீராத முதுகு வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயதுடைய அஷ்மா பேகம் என்னும் இளம்பெண்ணுக்கு கடந்த 2 வருடங்களாக  கடும் முதுகு வலி இருந்திருக்கிறது. இதனால் அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் பல நாட்டு வைத்தியம் சிகிச்சைகள் எடுத்தும் அவருக்கு முதுகு வலி குணமாகவில்லை.

இதை தொடர்ந்து, சமீபத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் அரசு நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்தார்கள். அதில் எதோ ஒரு மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.

பின்னர், ஒரு சில நாளுக்கு முன் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் முடிவில் இளம்பெண் அஷ்மா பேகத்தின் முதுகிலிருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. பெண்ணின் முதுகில் துப்பாக்கி குண்டு இருப்பதாய் கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், காவல் துறையினர் விசாரணையில் இளம்பெண் அஷ்மாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ புல்லட் அவரது முதுகில் எவ்வாறு பதிந்தது என்பதை போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. மேலும் அஷ்மாவின் முதுகில் ஒரு காயம் இருப்பதாகவும், அது துப்பாக்கி புல்லட் உள்ளே சென்றதற்கான அடையாளம் தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl heavy back pain treatment doctor shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->