டீவி சீரியலை பார்த்து மூன்று சகோதரிகள் செய்த காரியம்.! துடிதுடித்து பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


டிவி சீரியல் பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு 3 சகோதரர்களுக்கிடையே விபரீதம் நிகழ்ந்துள்ளது. 

உத்திரபிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் இந்த சோக சம்பவமானது அரங்கேறியுள்ளது. மூன்று சகோதரிகள் தொலைக்காட்சி முன்பு ஒன்றாக அமர்ந்து சீரியல் பார்த்து கொண்டு இருந்துள்ளனர். 

அப்பொழுது விருப்பமான சீரியல் குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், மூன்றுபேரும் விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர். 

பின்னர் உயிருக்குப் போராடும் நிலையில் மூன்று சகோதரிகளும் ஊர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்  ஆனால், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். 

மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl death for TV serial 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->