அடேங்கப்பா! வெளிநாட்டில் செம மாடர்னாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணா இது.! எல்லாம் காதல் செய்யும் வேலை!! - Seithipunal
Seithipunal


கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆண்ட்ரியன். 41 வயது நிறைந்த இவர் அங்கு நல்ல சம்பளம், சொகுசு வாழ்க்கை என ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
மேலும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றி மகிழ்ச்சியாக இருப்பது, பார்ட்டி என நகர வாழ்க்கையில் ஊறிப் போய் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரியனுக்கு பேஸ்புக் மூலம் ஹரியானாவில் உள்ள ஒரு சிறியகிராமத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தன்னை விட அதிகமான வயது கொண்டிருந்தாலும் ஆண்ட்ரியனை திருமணம் செய்து கொள்ள முகேஷின் குடும்பத்தார்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஆண்ட்ரியன் கலிபோர்னியாவில் இருந்து,ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் முகேஷ் குடும்பம் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆண்ட்ரியனும்  அவர்களுடன் ஆடு மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 மேலும் இது குறித்து ஆண்ட்ரியன் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  நான் இங்குள்ள கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறிவிட்டேன். மேலும் இந்திய மருமகளாக வாழ்வதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl change for lover after marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->