அக்கா மகளை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்..! அரங்கேறிய துயர சம்பவம்..!
girl abused by relation
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதமானது அதிகரித்து வருவதால், குஜராத் குற்றவாளிகளுக்கு புகலிடமாக மாறி வருகின்றது. தன்னுடைய உறவினர் மீது 15 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமானது வெளியில் வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது சகோதரியின் மகளான சிறுமியை பள்ளி விடுமுறைக்கு குஜராத்துக்கு அழைத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் அந்த சிறுமியை அவரின் மனைவி விபச்சாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும், அவருடைய மனைவியும் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு வளாகத்தில் இருக்கும் அலுவலகத்தில் இந்த தம்பதியினர் ஒரு ஸ்பா மையத்தை வைத்திருக்கின்றனர். அதன்பின்னர் அந்த ஸ்பா மையம் மூடப்பட்டு இருக்கின்றது. அந்த சிறுமியை இவர்கள் வீட்டு சிறையில் அடைத்து கொடுமைபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை அந்த பெண் வீட்டில் இருந்து தப்பித்து வந்து அகமதாபாத்தில் பணிபுரியும் தன்னுடைய சகோதரரை தொடர்பு கொண்டு பின்னர் காவல் இதற்கு சகோதரருடன் சென்று புகார் அளித்து இருக்கின்றனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.