மகள் என்றும் பாராமல் 10 வருடங்களாக தந்தை செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலதில், போபால் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர நாத். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவர், இவரது மகள் பாரதி சிங் வயது 28 .

கடந்த சில நாட்களாக தனது காணவில்லை என்றும், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் சுரேந்திரநாத்தின் மகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

இதை தொடர்ந்து இவரும் அவரது மகளை தேடும் பணியில் இருந்தார். இந்த நிலையில் அவரது மகள் வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும், ஆனால் அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்து, வேறு ஒரு எம்.எல்.ஏ.வின் மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த திருமணத்திற்கு சம்மதிக்காததால், கடந்த பத்து வருடங்களாக மகள் என்றும் பாராமல் சித்திரவதை செய்தும், போதை ஊசி போட்டு வருவதாகவும், மேலும் எனக்கு தந்தையிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்திடம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து பேசிய சுரேந்திர நாத்,  இந்த குற்றச்சாட்டை மறுத்து, தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்டவர். இருப்பினும் தந்தையாக பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறது ஒரு குற்றமா என்று கேள்வி கேட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl abused by her father


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->