சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: பதிவுசெய்த வீடியோ வைத்து பிளாக்மெயில்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், குற்றவாளிகள் முழு வன்கொடுமை நிகழ்வையும் வீடியோவாக பதிவு செய்து, அதை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியதாகத் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, வீடியோவை ஆன்லைனில் வெளியிடாமல் இருப்பதற்காக, சிறுமியின் குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சம் பணம் கோரி, மிரட்டல் மற்றும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த சோகம் குறித்த தகவல் கிடைத்ததும், சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், இந்தக் குற்றத்திற்கு காரணமான வைபவ் (19) மற்றும் விஷால் (21) ஆகிய இரு இளைஞர்களையும் விரைந்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கள்ளத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த கொடூர சம்பவம் உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gang that harrasement girl Blackmailed her recorded video What happened


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->