பண மோசடி செய்த கேம் ஆப் நிறுவனம்...கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம்..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்தது. 

பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணையை  மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தினர். 

இந்த சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணி ஈடுபட்டது. இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா /என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு  வருவதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

game app cheated money


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->