இந்தியா சந்திக்க போகும் பேரழிவு! ஆபத்தில் இந்தியா!! அதிர்ச்சி தரும் ஆராய்ச்சியாளர்கள்!!!
flood in india
கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இனிவரும் காலங்களில் இதைவிட மிகப்பெரிய வில்லன்கள் இந்தியாவை தாக்கும் சூழல் உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை, மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். புவி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தை குறைத்தால் மட்டுமே வரும் காலங்களில் ஏற்படப்போகும் வெள்ளத்தை தடுக்க முடியும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 1.5 டிகிரிக்குள் வெப்பம் அடைவதை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய அழிவை இந்தியா சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.