திருப்பூர்: பூட்டிய வீட்டில் மோசம்.! சற்றுநேரத்தில் அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே, பூட்டியிருந்த வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் அருகே பல்லடத்தில் மாதப்பூர் சூர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற நபர் வழக்கம் போல் இன்று பணிக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டில் இருப்பவர்களும் வேலை காரணமாக காலை வீட்டைப் பூட்டு போட்டு பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

இத்தகைய சூழலில், அனைவரும் பணிக்‍கு சென்றிருந்த போது, அவருடைய வீட்டில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறைனருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.


 
இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மிக விரைவாக செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுப்பிரமணியன் வீட்டில் இருந்த ப்ரிட்ஜ், டிவி, பாத்திரங்கள், துணிமணிகள் போன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIRE IN LOCKED HOUSE IN THIRUPUR


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->