பற்றியெரிந்த மருத்துவமனை., தீயிக்கு இரையான பச்சிளம்குழந்தை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தலைநகரமான ஐதராபாத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது. எல்.பி. நகரில் அமைந்துள்ள சைன் குழந்தைகள் நல மருத்துமனையின் 3 ஆவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது.

அதில், இன்குபேட்டர்களில் 6 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் சுமார் அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அதன் பின் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து விரைந்து தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற 5 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்குபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in telungana 5 month baby death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->