கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து.. 12 பேர் பலி.!!
fire accident in maharashtra hospital
மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு இல்லாத நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகள் 12 பேர் தீ விபத்து காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
fire accident in maharashtra hospital