குஜராத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!!
fire accident in gujarat
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பயிற்சி வகுப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர் தீ பற்றிய கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
இரண்டாம் மாடியில் மாணவர்களுக்கு பயிற்சி நடந்து கொண்டுயிருக்கும் சமயத்தில் அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் உடல் கருகி பலியாகி உள்ளனர். பலர் தீயில் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதனால், பல மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் பாதிப்பு குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆறுதலும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி பாதிக்கப்பட்டோருக்கும் பலியானோருக்கும் தலா 5 லட்சம் அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.