பேட்டரி வெடித்தால் பயங்கர தீ விபத்து, 10-க்கும் மேற்பட்டோர் தீவிபத்தில் சிக்கி தவிப்பு.!
fire accident in delhi
டெல்லியில் உள்ள பீராகரி பகுதியில் இயங்கி வரும் பேட்டரி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த பேட்டரிகள் வெடித்தன் காரணமாக ஏற்பட்ட இந்த தீயானது விரைவாக பரவியது. பேட்டரிகள் வெடிக்க தொடங்கியதால் தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதற்கிடையே இந்த தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இன்னும் மீட்பு பணிகள் தொடந்து நடந்து வருறது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மேலும் மீட்பு நடவடிக்கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.