துணிக்கிடங்கில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து 9 பேர் பலி.!
fire accident in delhi
டெல்லியில் உள்ள துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.
தலைநகர் டெல்லியில் உள்ள கிராரி என்ற இடத்தில் இயங்கி வந்த துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த துணிக்கிடங்கில், தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக வெளியான முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.