காஷ்மீர் எல்லையில் என்ன நடக்கிறது தெரியுமா? படங்களுடன் வெளியான பகீர் தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்ததையடுத்து அமர்நாத் யாத்திரை வந்த யாத்ரீகர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், மேலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லை குழுவுடன் இணைந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அப்போது இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச்சூத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

கடந்த 36 மணி நேரத்தில் இதுவரை 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும். பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால் இறந்தவர்களின் உடலை மீட்க முடியவில்லை எனவும்  இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் கடந்த 36 மணி நேரத்தை தாண்டியும் துப்பாக்கி சண்டை நடைபெற்று கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight between Indian military with terrorists in Kashmir Border


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->