தந்தையை துண்டு துண்டாக போட்டு, சூட்கேஸில் வைத்து வீசிய 19 வயது மகள்..!
father murder case investigation
மும்பையில் உள்ள மாகின் கடற்கரையில் கடந்த 4 ஆம் தேதி கடற்கரை ஓரமாக சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களின் கண்களில் சூட்கேஸ் ஒன்று தென்பட்டது. அந்த சூட்கேஸ்ஸில் இருந்து ரத்தம் வழிய காலை மட்டும் வெளியே நீட்டி இருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சூட்கேசை கைப்பற்றி பின்னர், அதை பரிசோதித்து பார்த்ததில் சூட்கேசில் இருப்பது ஆண் சடலம் என்பதும், அதை துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த சூட்கேஸில், கையோடு இணைந்து தோள்பட்டை பகுதி மற்றும் ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அந்த சூட்கேஸின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் ஸ்வெட்டர் போன்ற சில துணிகளும் இருந்தது. அதில், துணிகளில் ஆல்மோஸ்ட் மென்ஸ் வியர் என்ற கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், விசாரணை செய்த காவல்துறை இறந்தவரின் பெயரும் வீட்டு முகவரியும் கண்டுபிடித்தார்கள். இதைத்தொடர்ந்து அவரின் பெயரை வைத்த ஃபேஸ்புக்கில் தேடியபோது சூட்கேஸில் இருந்த அதே ஸ்வீட்டேரை இறந்தவர் போட்டுக் கொண்டிருப்பது போன்று புகைப்படங்கள் அதில் இருந்தது.
இதனால், இறந்தவர் 59 வயதான பெனட் ரிப்பலோ என்பவர் தான் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார், வீடு பூட்டி இருந்த காரணத்தால் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்ததில், அந்த வீட்டில் பெனட் ரிப்பலோ மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஆராத்யா(19) மட்டுமே வாழ்ந்து வந்தார்கள் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆராத்யா மற்றும் அவரது 16 வயதான காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழகி வந்திருக்கிறார். இது அவரது வளர்ப்பு தந்தையான பெனட் ரிப்பலோ கண்டித்திருக்கிறார்.
மேலும் அவர் அந்த பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், கடந்த 26ம் தேதி கம்பால் தாக்கி கதலனான சிறுவனின் உதவியோடு கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் சடலத்துடன் இருந்தார்கள். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து ஆட்டோவில் சென்று கடற்கரையில் வீசி எறிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
father murder case investigation