பிரபல பாடகி திடீரென தூக்கிட்டு தற்கொலை.. வெளியான அதிர்ச்சிக் கடிதம்.!
famous singer suicide
கன்னட திரையுலகில் பிரபல பாடகி ஆக இருப்பவர் சுஷ்மிதா(வயது 27). கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்தார். அதன்பிறகு கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் இருந்த சுஷ்மிதா அதிகளவில் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுஷ்மிதா அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷ்மிதா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது சகோதரர் சச்சினுக்கு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு தன்னுடைய கணவர், வைதேகி மற்றும் கீதா ஆகிய தான் நேரடியாக காரணம்.
நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு கெஞ்சினாலும், பிச்சை எடுத்தலும், அவர்களுடைய வன்முறையையும், சித்திரவதையும் குறையவே இல்லை. நான் தற்கொலை செய்து கொள்வதற்கு கொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.