நான்கு பேரை என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! பிரபல தமிழ் நடிகை ட்வீட்!! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத் சம்சாபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரின் எரித்துக் கொலை  கொடூரமாக செய்யப்பட்டார்.

இதையடுத்து, பெண் மருத்துவர் கொலை வழக்கில் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்திருந்தது, குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென தெலுங்கானா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, குற்றாவளிகள் நான்கு பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலுங்கானா போலீசார் விசாரித்து வந்தனர். இன்று காலை குற்றம் நடைபெற்ற இடத்திற்கு குற்றாவளிகள் நான்கு பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தங்கி விட்டு, தப்பி ஓட முயன்றுள்ளனர், இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் சுட்டனர். போலீசார் சுட்டதில் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதில் இருந்தும் தெலுங்கானா போலீசாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, கொண்டாடியும் வருகின்றனர். மேலும், பலர்  தங்க கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி  இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் பதிவு பதிவு செய்தவை, ஹைதராபாத்  பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  என்கவுண்டர்  போட்டு தள்ளிய  போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உன்னாவ், பொள்ளாச்சிக்கு  இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress tweet for hyberabad encounter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->