டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டா கணக்கும் முடக்கப்படும் அபாயம்..!
Facebook sent notice to Rahul Gandhi
டெல்லியில் பாலியல் வன்கொடுமைகக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களோடு எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அது தங்களது கொள்கைளுக்கு எதிரானது எனக்கூறி ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடைசெய்ய உத்தரவிட்ட வேண்டி கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. ஆனால் அதற்கு ஃபேஸ்புக் தரப்பில் இருந்து பதில் இல்லாததால் தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஃபேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு விளக்கம் தந்த ஃபேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராகுல்காந்திக்கு அனுப்பட்ட நோட்டீஸில் அனுப்பியுள்ளது அதில் அந்த பதிவை உடனடியாக நீக்குமாறு தெரிவிக்கப்படுள்ளது. அந்த பதிவு நீக்கபடாமல் இருப்பின் அவரின் கணக்கு முடக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
English Summary
Facebook sent notice to Rahul Gandhi