#BREAKING :: பஞ்சாபில் பதற்றம்... முதலமைச்சர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு...!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இன்று மாலை 4:30 மணி அளவில் பகவந்த் மான் வீடு அருகே உள்ள மாந்தோப்பில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நபர் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு முதல்வர் பகவந்த் மான் வீடு மற்றும் அவர் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டர் இறங்கும் தலம் இடத்திற்கு மிகவும் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் பகவந்த் மானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கின்றன. முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Explosives found near Punjab CM house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->