முற்றத்தில் விளையாடிய குழந்தை.. கவனக்குறைவால் அரங்கேறிய சோகம்.. பெற்றோர்களே உஷார்.!
Ernakulam child boy died in well
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா வாழப்பிள்ளி பகுதியைச் சார்ந்தவர் ஷிஜோ (வயது 36). இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 35).
இவர்கள் இருவருக்கும் ஏபெல் என்ற 2 வயது குழந்தையும், ஜோயல் என்ற ஒரு வயதுக் குழந்தையும் இருக்கின்றனர். ஷிஜோ இன்று வழக்கம்போல பணிக்கு சென்று விட்ட நிலையில், சோனியா வீட்டில் சமைத்து கொண்டு இருந்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் வீட்டு முன்னதாக இருக்கும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். சோனியா சமையல் வேலை முடிந்ததும் வந்து பார்க்கையில், ஏபேலை காணவில்லை. ஜோயல் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அக்கம்பக்கத்தில் தேடியும் ஏபேல் மாயமாகியுள்ளான்.
பின்னர் வீட்டில் உள்ள கிணற்றில் எதிர்ச்சையாக கவனித்த நேரத்தில், கிணற்றுக்குள் இருந்து குறைந்த அளவு தண்ணீரில் குழந்தை இறந்து மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி அலறவே, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை பலியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ernakulam child boy died in well