மும்பை விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் தங்கத்தை கடத்தி வந்த 11 வெளிநாட்டு பெண்கள்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. 

அந்த தகவலின் படி, நேற்று முன்தினம் சுங்கவரித்துறை அதிகாரிகள் ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முப்பது முதல் ஐம்பது வயதுடைய வெளிநாட்டை சேர்ந்த பதினோரு பெண்களின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து, சுங்கவரித்துறை அதிகாரிகள் அந்த பெண்கள் எடுத்துவந்த உடைமைகளில் சோதனை செய்ததில் எதுவும் இல்லாததால், அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பெண்கள் தங்கத்தை பிறப்புறுப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பின்னர், அவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த பெண்களை போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கத்தை கடத்தி வந்த 11 பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தங்கத்தை மும்பையை சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு, வந்ததாக தெரியவந்தது. இதனால் போலீசார் மும்பையை சேர்ந்த அந்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eleven Foreign womens arrested for gold threat in mumbai airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->