எலக்ட்ரிக் ஸ்கூட்டியின் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பார்த்து அச்சம் கொள்ளும் மக்கள் இ-ஸ்கூட்டரை நாடுகின்றனர். ஆனால் அடுத்தடுத்து இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து  பற்றி எரியும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் மின்சார ஸ்கூட்டியின் பேட்டரி வெடித்ததில் ஷபிர் அன்சாரி என்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் மின்சார கூட்டிக்கு சார்ஜ் செய்த போது அதிக வெப்பத்தின் காரணமாக பேட்டரி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric Scotty fired in Maharashtra 7 year's old boy death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->