விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு!. லட்சக்கணக்கில் போலீசார் குவிப்பு!.
விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு!. லட்சக்கணக்கில் போலீசார் குவிப்பு!.
தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் வாக்குப்பதிவு காலை 7.00 மணியளவில் துவங்கியது. இதில் நக்சலைட் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுப்புடன் வாக்குப்பதிவு துவங்கியது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலுக்காக மாநில போலீசார், துணை ராணுவம், பறக்கும் படைகள் என சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
English Summary
election started in thelungana