அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவு கடல் பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கடல் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிகாலை 3:40 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 24ஆம் தேதி தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றி சில பகுதிகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. 15 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 4 point 9 magnitude hits Andaman Nicobar Sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->