மேகாலயாவில் 4.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்.!
Earthquake in Meghalaya
மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலம் துராவிலிருந்து வடகிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில், இன்று காலை 6.32 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
அட்சரேகை 25.68 டிகிரியும், தீர்க்க ரேகை 90.60 டிகிரியும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் நேபாள நாட்டை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்த திபெத்தில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நேபாளத்தின் கிழக்கு எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.