இமாச்சலில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்.!
Earthquake in Himachal Pradesh
இமாசல பிரதேசத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமாசல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா நகரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் சம்பா என்ற பகுதியில் இன்று காலை 5.17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகிள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சற்று அச்சமடைநந்து சாலைக்கு வந்தனர். இதனால் பெரிய அளவிலான இழப்புகள் எதுவுமில்லை என்று கூறப்படுகிறது.
English Summary
Earthquake in Himachal Pradesh