அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! டெல்லியில் உணரப்பட்டது.! - Seithipunal
Seithipunal


புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.19 மணியளவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் ஹரியானாவின் ஜஜ்ஜரில் இருந்தும், அதன் ஆழம் தரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த நவம்பர் மாதம் நேபாள எல்லையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake hits Haryana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->