அசாமில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் வட-மத்திய பகுதியில் நேற்று பிற்பகல் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலம் குவஹாத்தியின் வடகிழக்கில் மதியம் 12:27 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் உள்ள தர்ராங் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது குவஹாத்தியில் இருந்து வடகிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மற்றும் நாகோன் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் உணர்ந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மே மாதம் அசாமில் 24 மணி நேரத்திற்குள் 3.9 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake hits Assam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->