இந்தியாவில் அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!!
earth quake in maharashtra
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 2.8 ரிட்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, மிசோரமில் சம்பால் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிட்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், தெற்கு திபெத்தின் ஸைஸாங் பகுதியில் சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
English Summary
earth quake in maharashtra