சூறாவளி மழை.. 30 பேர் பரிதாப பலி.. ரூ.4 இலட்சம் இழப்பீடு அறிவித்த மாநில முதல்வர்.!!
due to heavy rain 30 persons died in uttar pradesh
இந்தியாவில் கரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல மாநிலங்கள் செய்வதறியாது திகைத்து வருகிறது. இந்த நிலையில், கடுமையான அளவு பாதிக்கப்பட்ட மாநிலத்தில் உத்திரபிரதசமும் ஒன்று.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் சூறாவளிக்காற்றானது பலமாக வீசி வருகிறது. மேலும், அங்குள்ள பல மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. நேற்று அங்கு காற்றுடன் கூடிய பலத்த மழையானது பெய்து வருகிறது.
மேலும், சுமார் 50 மணியில் இருந்து 60 மணி வேகத்தில் காற்றானது வீசிய நிலையில், வேரோடு மரங்கள் சாய்ந்துள்ளது. குடிசை வீடுகளும் தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில், 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த மழையால் 38 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
due to heavy rain 30 persons died in uttar pradesh