மது அருந்த ஒரு மணிநேரம் இரயிலை நிறுத்திய ஓட்டுநர்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் : மது அருந்துவதற்காக ஒரு மணி நேரம் ரயிலை நிறுத்திய, உதவி ஓட்டுநரை ரயில்வே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பயணிகள் ரயில் ஓட்டுனர் ஒருவர் மது அருந்துவதற்காக ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயிலை நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிகார் மாநிலம், ஹசம்பூர் ரயில்வே நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக பயணிகள் ரயில் ஒன்று புறப்படாமல் நின்று கொண்டிருந்தது.

அந்த ரயிலின் உதவி ஓட்டுநர் ரயிலில் இருந்து கீழே இறங்கி மது அருந்த சென்றதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொள்ளவே, அப்போது மது அருந்தி விட்டு வந்த ஓட்டுநரை உடனடியாக கைது செய்தனர்.

பின்னர் ஒரு நேரம் தாமதமாக வந்த ரயில் இயக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், அந்த உதவி ஓட்டுநர் மீது முழுமையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver stopped the train for drinking alcohol


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->