ஆசை காட்டி அபார்ஷன் செய்ய வைத்த டாக்டர் காதலன்.! திருமண நேரத்தில் காவல் நிலையத்தில் காதல் ஜோடி.!  - Seithipunal
Seithipunal


அலகாபாத்நகரில் அசுதோஷ் யாதவ் என்ற மருத்துவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் யுனிவர்சிட்டியில் படித்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவருடன் பல முறை உடலுறவு கொண்டு அவரை ஏமாற்றியதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் அவர், "தான் மெடிக்கல் காலேஜில் படிக்கும்பொழுது தன்னோடு நன்றாகப் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். நானும், அதனை நம்பி அவரை உயிருக்குயிராய் காதலித்து அவருடன் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளேன். அவரோடு நான் பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இதன் காரணமாக நிறைய முறை அபார்ஷன் எனக்கு நடந்துள்ளது. 

ஆனால், அவர் திடீரென அங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு சென்றார். அங்கு சென்ற பின்னரும் அவர் தன்னை உறவு வைத்து கொள்ள அழைப்பார். அப்போதெல்லாம் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவார். ஆனால், அவர் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றார். எனவே, என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்கள். 

இதைக் கேள்விப்பட்ட அவர் 'வேறு ஒருவருடன் தனது திருமணத்தை நான் அனுமதிக்க மாட்டேன். அப்படி திருமணம் நடந்தால் அந்த உறவை நிலைக்க விடமாட்டேன்' என்று மிரட்டுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

docter cheated women in alagabath


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->