பீடி தராத லேடியை அடித்தே கொன்ற நீலச்சட்டை மர்ம ஆசாமி.! தீவிரமாக தேடிவரும் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் பீடி தராத ஒரே காரணத்திற்காக, கடைக்கார பெண்ணை சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே போதை ஆசாமி ஒருவர் பீடி தராத காரணத்தினால், கடை கார பெண்ணை அடித்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கடையில் நீல சட்டை அணிந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடைக்கார பெண்ணிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்கார பெண் காசு இல்லாமல் பீடி தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அந்த இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நீலச்சட்டை மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi shop women killed cctv


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->