ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுவியா?.. முஸ்லீம் இளைஞர்களால், துடிதுடிக்க கொடூர கொலை செய்யப்பட்ட பயங்கரம்.!
Delhi Rinku Sharma Youngster Murder by Muslim Youngsters due to Jai Sriram
புதுடெல்லியில் உள்ள மங்கோல்பூரியின் கே பிளாக் குறுகிய தெரு பகுதியில் வசித்து வந்தவர் ரிங்கு ஷர்மா (வயது 25). இவர் தனது தாய், தந்தை என குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் பெற்றோர்கள் கண்முன்னே ரிங்குவை கத்தியால் குத்தி கொலை செய்தது.
மேலும், அந்த கும்பல் அண்டை வீட்டில் வசித்து வந்த முஸ்லீம் மதத்தை சார்ந்தவரின் பிள்ளைகள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவார்கள். ரிங்கு சர்மா கத்திகுத்து வாங்கி இறக்கும் தருவாயில், " ஜெய் ஸ்ரீ ராம் " என்ற வாசகத்தை முழக்கமிட்டவாறே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மரணமடைந்தார்.
ரிங்கு சர்மாவின் வீடு முழுவதும் இரத்தமாக மாறிய நிலையில், பதறிப்போன பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொலையை அரங்கேற்றிய கும்பல் தலைமறைவாகவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரிங்கு சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விஷ்வ இந்து பரிசுத் இளைஞரணியான பஜ்ரங் தளம் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து வந்த ரிங்கு ஷர்மா, அயோத்தி கோவில் கட்டும் விவகாரத்தில் பணம் வசூல் செய்தது தொடர்பான ஆத்திரத்தில் முஸ்லீம் இளைஞனால் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ரிங்கு இயல்பாகவே அமைதியான இளைஞர் என்றும், யாரிடமும் எந்த விதமான பிரச்சனை இல்லை என்றும், மாற்று சமூகம், மாற்று மதத்தினரிடமும் அன்போடு பழகி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
சிறுவயது முதலே ரிங்கு அமைதியாகவே இருந்து வந்த நிலையில், கோவில்கட்ட பணம் வசூல் செய்ய உடன் சென்றிருந்தவர்களில் ரிங்குவும் ஒருவராக இருந்துள்ளார். ரிங்கு ஷர்மா இயல்பாகவே ஹனுமான் மற்றும் ஸ்ரீ ராமனின் தீவிர பக்தராக இருந்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் டேனிஷ், இஸ்லாம், ஜாஹித் மற்றும் மெஹ்தாப் ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து, இவர்களை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Delhi Rinku Sharma Youngster Murder by Muslim Youngsters due to Jai Sriram