பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை?... கண்ணீரில் உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள காவல்துறையில் பணியாற்றி வந்த பெண்மணி ரபியா சைபி (வயது 21). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவரை கொலை செய்ததாக நிஜாமுதீன் என்பவர் காலிந்தி கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

காவல் துறையினர் முதற்கட்டமாக மேற்கொண்ட விசாரணையில், நிஜாமுதீனுக்கும் - ரபியா சைபிக்கும் திருமணம் நடைபெற்றாகவும், திருமணத்தை ரபியாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இடையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் நிஜாமுதீன் கூறியதாக காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பான குற்றசாட்டுகளை முற்றிலுமாக ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல், கொலை புகார்கள் அளித்துள்ளனர். 

இது குறித்து பெண்ணின் சகோதரர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உறவினர்கள் இது குறித்து தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட நிஜாமுதீன் சைபியின் நண்பர் தான். அவர் சம்பவத்தன்று தனது 4 நண்பர்களுடன் சைபியை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி இருக்கிறார். 

மேலும், கூட்டுப்பாலியல் பலாத்காரம் அரங்கேறி, இறுதியில் உண்மையை கூறிவிடுவார் என்ற பயத்தில் அவர்கள் சைபியை கொலை செய்துள்ளான். சைபியின் மார்பகங்கள் இரண்டும் அறுக்கப்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளது. அவரின் அந்தரங்க உறுப்புக்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும் என்று கூறுகின்றனர். 

இது தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில், #JusticeForRabiya என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Police Woman Rabiya Sexual Abused Gang and Brutal Murdered by Man Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->