கர்ப்பிணி மனைவி என்றும் பாராது, கணவன் அரங்கேற்றிய கொடூரம்.. துடிதுடித்து பலி.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியை சார்ந்தவர் ரஜினிகாந்த் தீட்ஸித் (வயது 28). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த பெண்மணி குஷி (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். 

தற்போது குஷி கர்ப்பிணியான நிலையில், தற்போது எட்டு மாத கர்ப்பிணி பெண்ணனாக இருந்து வருகிறார். இந்நிலையில், குஷியின் நடத்தையில் ரஜினிகாந்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், குஷி தனது ஆண் நண்பரை அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார். 

இதனால் எழுந்த சந்தேகம் கணவனுக்கு அதிகரிக்கவே, மனைவியும் கணவர் தன்னை தவறாக புரிந்துகொள்வார் என்று எண்ணியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்படவே, வாக்குவாதத்தில் கர்ப்பிணி மனைவி என்றும் பாராது கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மறைக்க முயற்சி செய்துள்ளார். 

இதன்பின்னர், காவல் துறையினருக்கு விஷயம் தெரியவந்து ரஜினிகாந்த் தீக்ஷித்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், விசாரணையில், குஷிக்கு ஹரியானா மாநிலத்தை சார்ந்த வாலிபருடன் திருமணத்திற்கு முன்னர் பழக்கம் இருந்தும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Noida Pregnant girl Murder by Husband due to Affair Doubts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->