#Breaking: அமலுக்கு வந்தது மேலும் ஒருவார ஊரடங்கு... கொரோனா அதிகரிப்பால் டெல்லி மாநில முதல்வர் நடவடிக்கை.!
Delhi Govt Extend Lockdown till 3 May 2021 Announced by CM Aravind Gejriwal
இந்திய அளவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் சூழ்நிலைக்கேற்ப ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் ஒருவார ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறுவதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில், டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், இந்த ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Delhi Govt Extend Lockdown till 3 May 2021 Announced by CM Aravind Gejriwal