உயிரிழந்தவரின் உடலை எரியூட்ட மணிக்கணக்காக காத்திருக்கும் உறவினர்கள் - டெல்லியில் அவலம்.!
Delhi Corona Virus Death Patients Sad Story 27 April 2021
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் தாக்கத்தால் பல்வேறு பிரச்சனையை சந்தித்து வருகிறது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, தினமும் 350 க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள காசிப்பூர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை எரியூட்ட இயலாமல் உறவினர்கள் பலமணிநேரம் காத்திருக்கும் சோகம் அரங்கேறியுள்ளது.
தினசரி மருத்துவமனைகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் வந்துகொண்டே இருப்பதால், அங்கு பிணங்களை வரிசையாக வைத்துக்கொண்டு இறந்தவர்களின் உறவினர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். சுமார் 24 மணிநேரமும் அந்த சுடுகாடு தொடர்ந்து இயங்கி வரும் சோகமும் அரங்கேறியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Delhi Corona Virus Death Patients Sad Story 27 April 2021