மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளொன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 30 ஆயிரமாக இருந்த நிலையில், இது 20 ஆயிரமாக குறைந்துள்ளது.

 

இந்நிலையில், டெல்லியில் மே மாதம் 10 ஆம் தேதியுடன் நீட்டிப்பு செய்யப்பட்ட ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், ஊரடங்கு மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Arvind Kejriwal Announce Lockdown Extended till 17 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->