எய்ம்ஸ் மருத்துவரின் ஒன்பது மாத கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா... வெளியான அதிர்ச்சி தகவல்.!!
delhi AIMS doctor wife also affected positive corona virus
சீன நாட்டில் உள்ள யூகான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸானது உலகம் முழுவதிலும் பரவி, நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகிறது.
இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கவும், பாதிக்கப்படாத மக்கள் பாதுக்காப்பாக இருக்கவும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க, சுமார் 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இவரது மனைவிக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
மேலும், இவரது மனைவி 9 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் நிலையில், இவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவரின் மனைவி அவசர வார்டில் அனுமதி செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
Tamil online news Today News in Tamil
English Summary
delhi AIMS doctor wife also affected positive corona virus