நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை? காரணம் இது தான்.!
day after tomorrow bank are holiday
கடந்த மாதம் பத்து பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக குறைக்க போவதாக கந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தநிலையில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் 22 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளவேலைநிறுத்த போராட்டத்தால் தங்களது வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது, இந்த இரண்டு ஊழியர்கள் சங்கங்களிலும் தங்களது ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லைஅதனால் பாரத ஸ்டேட் வங்கி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றுதெரிவித்துள்ளது.
English Summary
day after tomorrow bank are holiday