மறுமணம் செய்ய வற்புறுத்திய தாயை, ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்ட மகள்.!
daughter kills mother in delhi
இந்தியாவின் டெல்லி மாநிலத்தில், மாயா புரியில், வசித்து வருபவர் நீரு பக்கா. இவருக்கு வயது 47. இவர் மின் விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நடந்த முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.
இதன் காரணமாக, ஹரி நகரில் இருக்கும் அவரது தாயார் சந்தோஷ் பக்காவுடன் வசித்து வருகிறார். அவருக்கு வயது 81. முதல் கணவரை பிரிந்து வாழும் மகளை குற்றச்சாட்டையும், இரண்டாவது திருமணம் செய்யவும் நீருவின் தாய் அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மறுபடியும், இரண்டாம் திருமணம் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கோபம் அதிகரித்தால், அருகிலிருந்த கம்பியை எடுத்து வயதான தாயை தாக்கியிருக்கிறார் நீரு. உடனே வீட்டை விட்டு வெளியே சென்ற நீரு கஹசன் பஸ்தியில் என்னும் பகுதியில் கலக்கமான மனநிலையுடன் மற்றும் தலையில் காயத்துடன் நின்று கொண்டிருந்தார். நீருவை கண்ட போலீசார் அவரிடம் பேசிருக்கிறார்.
மேலும் இதுகுறித்த விசாரணையில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தாயை கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து, வீட்டிற்கு சென்று பார்த்த போலீஸார் அங்கு நீருவின் தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்தார். இதை தொடர்ந்து, போலீசார், நீரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
daughter kills mother in delhi