தாயை குத்தி கொன்றுவிட்டு, காதலனுடன் உல்லாசம்.! அந்தமானில் அம்ருதா.!
Daughter killed mother for love
பெங்களூரில் இருக்கும் ராமமூர்த்தி நகர் என்ற பகுதியில் நிர்மலா என்ற 54 வயதான பெண்மணி தன்னுடைய மகள் மற்றும் மகன் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அவருடைய மகளுக்கு 33 வயதாகிறது. அம்ருதா என்ற பெயர் கொண்ட அவர் மென் பொறியாளராக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி பிப்ரவரி 2ம் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்துக்கு சென்று குடியேறலாம் என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி டின்னர் முடித்து மூவரும் உறங்கச் சென்ற பின்னர், அதிகாலை 4 மணி அளவில் அமிர்தாவின் தம்பி ஹரிஷ் சத்தம் கேட்டு கண் விழித்து உள்ளார்.
அப்போது தன்னுடைய அறையில் அமிர்தா எதையோ தேடுவது கண்டு கேள்வி எழுப்ப தன்னுடைய பையை தேடுவதாக கூறி அமிர்தா வெளியில் சென்று மீண்டும் பத்து நிமிடம் கழித்து அறைக்கு வந்து ஹரிஷின் கழுத்தில் கத்தியால் குத்தி இருக்கின்றார். வலியில் துடித்த ஹரிஷ் தன்னுடைய அம்மா எங்கே என்ற கேள்வி எழுப்ப தான் கொலை செய்து விட்டதாகவும், 15 லட்சம் ரூபாய் தான் கடன் வைத்திருப்பதாகவும், தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை.
எனவே, பணத்தை கொடுத்தவர்கள் மிரட்டுகின்றனர். வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக கூறுகின்றனர். இதனால் நம்முடைய குடும்பத்திற்கு கெட்ட பெயர் உண்டாகும் என்று தெரிவித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஹரிஷ் அமிர்தாவை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அமிர்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினர் அம்ருதாவை தேடும் விசாரணையில் இருந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆராய்ந்த பொழுது ஒரு இளைஞருடன் சேர்ந்து அவர் பைக்கில் சென்றதாக தெரிகிறது. அந்த இளைஞர் அம்ருதாவின் காதலர். அம்ருதாவின் செல்போன் என்னை கொண்டு ட்ரேஸ் செய்ததில் அவர்கள் அந்தமானில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
English Summary
Daughter killed mother for love